“ரொம்ப தேங்க்ஸ்டி”
“தேங்க்ஸா? பல்லை உடைப்பேன். அகரன் வீட்டுக்கு வந்ததும் அவருக்குத் திருஷ்டி சுத்திப் போடு. கல்யாணமாகி எந்தப் பிக்கல் பிடுங்கல் இல்லாம நீங்க வாழுறதே நிறைய பேருக்குக் கண்ணா இருக்கும்”
சென்னையில் ஒரு பெரிய செய்தி தொலைகாட்சி சேனலில் நிருபராகப் பணியாற்றுபவள் கண் திருஷ்டி பற்றிப் பேசியது யாழினியின் உதட்டில் முறுவலைப் பூக்கவைத்தது.
“சரிடி கிழவி! நீ என் கல்யாணத்துக்கு வராதக் கோபம் கூட போயிடுச்சு இப்ப.”
“இப்ப பேசுனியே, இதே போல எப்பவும் பேசணும். அழுது வடியக்கூடாது. சரியா?”
வானதியிடம் பேசிய பிறகு யாழினியின் தைரியம் மீண்டது.
சிறிது நேரத்தில் அட்சரனும் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். நல்லவேளையாக அகரனுக்கு நடந்த எந்தத் துன்பமும் மூதாட்டிகளின் காதுகளுக்குப் போய் சேரவில்லை. யாழினியும் விவரமறிந்ததும் கஜேந்திரனின் வீட்டுக்குத்தானே ஓடோடி வந்தாள்.
அதனால் அகரன் சீக்கிரமாய் வந்ததைப் பார்த்த வேங்கடம்மாள் என்னவென விசாரித்தார்.
“உடம்பு கனகனனு இருக்கு ஆச்சி. காய்ச்சல் மாதிரி இருக்கு. அதனால வந்துட்டேன்” என்று சொல்லி வேங்கடம்மாளைச் சமாளித்தவன் வீட்டுக்குள் போக அவனைத் தொடர்ந்து தானும் சென்றாள் யாழினி.
உள்ளே வந்ததும் எங்கிருந்து துளிர்த்ததோ கண்ணீர், சட்டென அவனை அணைத்துக்கொண்டாள்.
அழுகையில் அவளது உடல் அதிருவது அகரனுக்குத் தெரிந்தது.
“ஒன்னுமில்ல யாழு! அருள்மொழி போன் பண்ணி இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுனதும் விட்டுட்டாங்க”
இந்தப் பகுதியைப் படிக்க தளத்தில் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சனை வாங்குங்கள். This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.