
“நீ ரொம்ப நல்லவன் ராகவ்” என்று சொன்னபடி அவனது கரத்தைப் பற்றிக் கொண்டாள்.
ராகவ் பெஞ்சிலிருந்து எழுந்தவன் “நான் நல்லவனா கெட்டவனாங்கிறது ரெண்டாவது… முதல்ல நீ என்ன நினைச்ச? அதைச் சொல்லு ஜான்சி ராணி” என்று தனது காரியத்திலேயே கண்ணாய்க் கேட்க அவந்திகா சிரித்துச் சமாளித்தபடி அவனுடன் பார்க்கை விட்டு வெளியேறினாள்.
“நீ சொல்லலைனா நம்ம இங்கே இருந்து கிளம்பவே போறதில்லை” என்று அவன் பிடிவாதம் பிடிக்கவும் வேறுவழியின்றி அங்கிருந்த மரம் மட்டைகளை நோக்கியபடி தான் எண்ணியதை அவனிடம் சொல்லி முடித்தாள் அவந்திகா.
“ஜான்சி ராணிக்கு மைன்ட் இவ்ளோ டர்டியா இருக்கு” என்று குறும்புடன் சொல்லிவிட்டு அவளைக் காரில் அமரச் சொன்னவன் காரை வீட்டை நோக்கிச் செலுத்த ஆரம்பித்தான்.
அவந்திகாவின் வீட்டின் முன்னே காரை நிறுத்தியவன் அவள் இறங்கியதும் “டேக் கேர்” என்று சொல்லவும்
“உள்ளே வந்துட்டுப் போ ராகவ்.. கண்டிப்பா சித்தி பார்ட்டியில இருந்து திரும்பி வந்துருப்பாங்க” என்று அவந்திகா வீட்டில் கண்ணை ஓட்டியபடியே சொல்ல
“ஏன்? கௌசிம்மாவை நினைச்சு பயமா இருக்குதா ஜான்சி ராணிக்கு?” என்று கேட்டுக் கண்ணை வேறு சிமிட்டிவைத்தபடி காரிலிருந்து இறங்கினான் ராகவ்.
“நான் ஒன்னும் சித்திக்குப் பயப்படலையே… உன் கூட வந்துட்டு உன்னை உள்ளே கூப்பிடலைனா அம்பு ஏதாச்சும் சொல்லும்.. இது எனக்குத் தேவையா? அதான் கூப்பிட்டேன்… சோ உன்னோட கேலி கிண்டல் அப்புறம் கண் சிமிட்டுனது மூனையும் வாபஸ் வாங்கிக்கோ” என்று அமர்த்தலாக மொழிந்தபடி அவனை வீட்டினுள் அழைத்துச் சென்றாள் அவந்திகா.
இந்தப் பகுதியைப் படிக்க தளத்தில் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சனை வாங்குங்கள். This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.