“என்ன சுழல் வந்துச்சா?”
குரலில் கேலியும் கிண்டலும் கொட்டிக் கிடந்தன.
“நீ எதுக்காக இங்க வந்த?” தனது ஏமாற்றத்தை மறைக்க முயன்று அழுகை வெடிக்க கேட்டாள் வசுப்ரதா.
மிருத்யுஞ்சயனோ “த்சூ! பாவம் பொண்ணு தன்னந்தனியா போனாளே, என்னாச்சோனு அக்கறையோட ஓடி வந்தேன்மா… உனக்கு ஒரு கஷ்டம்னா நான் தானே ஹெல்ப் பண்ணனும்?” என்று போலியான பவ்வியத்தோடு சொல்லவும், தனது உலகத்துக்குச் செல்வோமென வசுப்ரதா வைத்திருந்த கடைசி துளி நம்பிக்கையும் போய்விட்டது.
அழுகை மறந்தது! கோபம் தான் வந்தது!
“எதுக்கு என் பின்னாடியே சுத்துற நீ? என்னால என்னைப் பாத்துக்க முடியும்… நான் உன் கிட்ட வந்து ஹெல்ப் பண்ணுனு கேட்டேனா?”
எரிச்சலோடு சீறினாள் வசுப்ரதா. அவளது சீற்றம் அர்த்தமற்றதாக ஒலித்தது மிருத்யுஞ்சனுக்கு. அவனுக்குள்ளும் கோபம் பரவியது.
“நீ கேட்டா தான் ஹெல்ப் பண்ணணும்ங்கிற அவசியம் எனக்குக் கிடையாது… எனிவேஸ், இங்க என்னைத் தவிர உனக்கு ஹெல்ப் பண்ண எவனும் வரப்போறதில்ல”
அவனது கோபமானது குரலில் ஒருவித அலட்சியத்தை உண்டாக்கிவிட அது வசுப்ரதாவை இன்னுமே சீண்டியது.
“எவனும் வரவேண்டாம்… I am not a damsel in distress… சோ உதவுறதா நினைச்சு என் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க ட்ரை பண்ணாத… பசங்களோட கண்ணைப் பாத்தே அதுல இருக்குற கள்ளத்தனத்தை என்னால கண்டுபிடிக்க முடியும்… இப்ப உன் கண்ணுல தெரியுதே, அதைக் கண்டுபிடிச்ச மாதிரி”
கண்களைக் குத்துவது போல இரு விரல்களை நீட்டி அவள் சொன்ன விதத்தில் மிருத்யுஞ்சனின் கோபம் கரைந்து போனது.
புதிய இடத்தில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமென்ற அவளது எச்சரிக்கையுணர்வு புரிந்தாலும், தன்னிடம் எச்சரிக்கையாக இருந்து இவள் என்ன சாதித்துவிடப்போகிறாள் என்ற எண்ணம் அவனைக் கோபத்தை விடுத்து சிரிக்க வைத்தது.
“மனசுக்குள்ள இருக்குற திருட்டுத்தனத்தைக் கண்டுபிடிச்சிட்டா, அதைச் சிரிச்சு சமாளிச்சு திசை திருப்ப நினைக்குறது ரொம்ப பழைய சைக்காலஜி… என் கிட்ட அதை ட்ரை பண்ணாத மிரு”
பெரிய மனோதத்துவ நிபுணர் போல வசுப்ரதா பேசியதில் மிருத்யுஞ்சனின் உதடுகள் மில்லிமீட்டர் சிரிப்பிலிருந்து சென்டிமீட்டர் சிரிப்புக்குத் தாவின.
“எனக்குள்ள இருக்குற நேர்மைய நான் தொலைச்சதுக்கு நீ மட்டும்தான் காரணம்… நான் உன்னை ரசிக்குறது, இம்ப்ரஸ் செய்யணும்னு ட்ரை பண்ணுறது, உன்னை என் கூடவே வச்சுக்கணும்னு நினைக்குறதுக்கு உன் டிக்ஸ்னரில திருட்டுத்தனம்னு அர்த்தம்னா நான் வாழ்க்கை முழுக்க நேர்மையில்லாதவனா இருக்க தான் விரும்புறேன் வசு… சோ இங்க இருந்து எஸ்கேப் ஆக ட்ரை பண்ணாத… உன்னால போகவும் முடியாது… நீ சொன்னாலும் சொல்லாட்டியும் You are a damsel distress… என்னை விட்டா உனக்கு இங்க யாராலயும் பாதுகாப்பு குடுக்க முடியாது”
அதீத நம்பிக்கையுடன் மிருத்யுஞ்சயன் பேச, ஒருவேளை இதுதான் உண்மையோ என்று ஐயம் கொள்ள ஆரம்பித்தது வசுப்ரதாவின் உள்ளம்.
‘நான் கையறு நிலையில் இருக்கிறேனா? இனி என்னால் அம்மா, சிருஷ்டி, சாருலதா மேடம் என யாரையும் மீண்டும் பார்க்க முடியாதா?’